சென்னை: பெத்தவங்க இல்லன்ன பிச்சை தான் எடுத்திருப்பேன் என்று கனாகாணும் சீரியல் நடிகர் ராகவேந்திரன் புலி மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த ஒரு தொடர் தான் கனா காணும் காலங்கள். பள்ளி பருவ காலத்தை கண்முன்னே கொண்டு வந்த இந்த தொடர் எப்போதும் பலரின் பேவரைட் சீரியலாக இருக்கிறது.
என்னதான் அடுத்தடுத்து இரண்டு, மூன்று சீசன்கள் வந்தாலும் முதல் சீசன் போல இல்லை என்று தான் சொல்லணும். இந்த தொடரில் நடித்து பிரபலமானார் ராகவேந்திரன் புலி . இவர் வாழ்க்கையில் தன்னுடைய கஷ்டமான பயணம் குறித்து பேசி உள்ளார்.
அதில் என்னுடைய பெற்றோர் இல்லை என்றால் நான் பிச்சைதான் எடுத்திருப்பேன். வாய்ப்பு கிடைத்தால் தான் வேலை பெரிய லைம் லைட்டில் இருந்து கீழே விழுவது கஷ்டம் . எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மறுபடியும் தன்னுடைய பயணத்தை தொடங்குவது அதிகமான வலி.
நான் ரொம்ப ஜாலியா கலகலன்னு இருந்த பையன். பெரிய சறுக்கலுக்கு பிறகு அப்படியே அமைதியாகி விட்டேன்” என்று கூறியுள்ளார்.