தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் சேவைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், சினிமா மற்றும் சமூக சேவைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

லண்டனைச் சேர்ந்த ‘திங்க் தேன் பிரிட்ஜ் இந்தியா’ என்ற அமைப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ விழாவில் விருதை வழங்கியது. விழாவை பிரிட்டிஷ்-இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் நவேந்து மிஸ்ரா மற்றும் சோஜன் ஜோசப், பாப் பிளாக்மேன் ஆகியோர் கூட்டாக தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்துகொண்டனர்.