‘வாலி’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தேவி ப்ரியா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று, அஜித் குமார் மற்றும் சிம்ரன் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்தப் பேச்சு தற்போது அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அவர் அஜித்துக்கு வைத்த செல்லப்பெயர் ‘வொயிட் சாக்லேட் பாய்’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் குறித்துப் பேசும் போது தேவி ப்ரியா, அவர் மிகவும் நன்றாகவும் மென்மையான குணம் கொண்டவராகவும் இருந்ததாகக் கூறினார். ஷாட்டுக்கு வரும்போது முகத்தில் தண்ணீர் தூவி, பனியில் பூத்த பூ போல ஜென்டில்மேன் போன்று நடந்து கொண்டவர் என அவர் உருக்கமாக விளக்கியுள்ளார். அவருடன் நடித்த அனுபவம் தனக்கென்றே ஒரு மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
சிம்ரன் குறித்து பேசும் போது, இரண்டு படங்களில் அவருடன் நடித்த அனுபவம் இனிமையாக இருந்தது என்றும், இப்போதும் சந்திக்கும்போது அன்புடன் ஹாய் கூறி ஹக் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். சிம்ரனை ‘ஸ்வீட் அண்ட் க்யூட்’ என அழைத்துள்ளார் தேவி ப்ரியா.
‘வாலி’ படத்தில், மாற்றுத் திறனாளியாக நடித்த அஜித் குமாரிடம் வேலைக்கு சேர விரும்பும் பெண் என தேவி ப்ரியா நடித்த காட்சி இன்று வரை ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு சீன். அந்த காட்சியில், அஜித்தை பார்த்தவுடன் திட்டும் பாணியில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார்.
2024ஆம் ஆண்டில் அஜித் குமார் பந்தய உலகில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளார். தனது ரேசிங் அணியுடன் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் சினிமாவிலிருந்து விலகிவிட்டார் என்ற வதந்திகள் பரவினாலும், அது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது அடுத்த திரைப்படம், அதாவது ஏ.கே. 65 படம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் நவம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கும் நிலையில் உள்ளது. 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் அஜித் குமார் பங்கேற்கும் செய்தியை அறிந்து, அங்கும் ரசிகர்கள் கூட்டமாக வருவதை பார்க்க முடிகிறது. இந்த வரவேற்பு மட்டுமின்றி, அவரின் பங்கேற்பு ஸ்டேடியங்களில் கூட ரசிகர்கள் புடைசூழ்ந்த காட்சியாக மாறியுள்ளது.