சென்னை: ரூபாய் 700 கோடி பட்ஜெட்டில் மகாபாரத படத்தை இயக்க இருப்பதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி அடுத்ததாக ₹700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என 2 பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவர் கடைசியாக இயக்கி ‘தி வாரியர்’ படம் ஃபிளாப் ஆனது. சமீபத்தில் இவரது இயக்கதில் வந்த எந்த படங்களும் பெரியளவில் வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.