சென்னை: 2017-ம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழில் ஜி.வி நடித்த ‘100% காதல்’ மற்றும் ‘கொரில்லா’ படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், ஷூட்டிங்கின் போது இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி கூறியுள்ளார்.
“எனது திரையுலக வாழ்க்கையில் பல நல்ல மனிதர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அதே சமயம் சில கெட்டவர்களுடனும் வேலை பார்த்திருக்கிறேன். எனக்கு சினிமா பின்னணி கிடையாது. தென்னிந்தியப் படத்தில் நடிக்கும்போது, கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, எனது அனுமதியின்றி டைரக்டர் நேராக கேரவனுக்குள் வந்தார். அப்போது எனக்கு 22 வயதுதான். அவர் கதவைத் தட்டியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை.

அவர் வேண்டுமென்றே செய்தார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். திடீர்னு கோபம் வந்து டைரக்டரைப் போகச் சொன்னேன். என் அலறல் செட் முழுவதும் கேட்டது. அந்த நேரத்தில், இயக்குனர் மிகவும் சங்கடப்பட்டார். படப்பிடிப்பில் இருந்த சிலர் வந்து என்னிடம் விசாரித்தனர். ஆனால் யாரும் என்னை ஆதரிக்கவில்லை, இயக்குனரை ஆதரிக்கவில்லை. ஒரு இயக்குனரை எதிர்த்தால் அடுத்த பட வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது என்பதும் எனக்கு தெரியும்” என்றார் ஷாலினி பாண்டே.