
ஹைதராபாத்: நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் நடிகர்கள் மகேஷ் பாபு, ராம் சரண், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்து கொள்கின்றனர். நாகார்ஜுனா பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன். இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகர் ஆவார்.
நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் மனக்கசப்பு காரணமாக 2021-ம் ஆண்டு பிரிந்தனர். இதற்கிடையில், நாக சைதன்யாவின் பெற்றோர் மறுமணம் செய்ய விரும்பினர். பல வருடங்களாக நண்பர்களாக பழகிய சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

‘பொன்னியின் செல்வன்’ உள்பட பல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர் சோபிதா துலிபாலா. இந்நிலையில் இவர்களது திருமணம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. சிரஞ்சீவி, பிரபாஸ், ராஜமௌலி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, ராம் சரண், நயன்தாரா, மகேஷ் பாபு இந்த திருமணத்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக ஹல்தி விழா நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.