சென்னை: சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில், “அதிர்ச்சியூட்டும் காட்சிகள் மனதை உடைக்கின்றன. யாருக்கு ஆறுதல் கூறுவது, எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
கரூர் துயரச் சம்பவத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் நகரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.