‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தாலும், மற்ற நடிகர்களின் காட்சிகள் இன்னும் சில நாட்களே உள்ளன. படக்குழு இறுதி கட்ட வேலைகளிலும் கவனம் செலுத்தும். கே.வி.என் தயாரிக்கும் இந்தப் படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தின் பணிகள் முடிந்ததும், தனுஷ் நடிக்கும் படத்தை எச். வினோத் இயக்குவார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிப்பார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமையை லலித் குமார் பெறுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

‘ஜனநாயகன்’ படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு, தனுஷின் படத்தை இயக்க எச். வினோத் திட்டமிட்டிருந்தார். தனுஷ் அந்தப் படத்தை முடித்துவிட்டு, “நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்” என்று சொன்னதால்தான், எச்.வினோத் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.