பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல் (90) உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்றுமுன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மின் மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தது.

பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், “இந்தியா ஒரு மனிதநேயமிக்க கதைசொல்லியை இழந்து விட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். உண்மையான இந்தியாவைத் தன் திரைப்படங்கள் மூலம் திரைக்குக் கொண்டு வந்தவர். அவர் தனது படங்களில் ஆழமான சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசி, சாதாரண விஷயங்களைக் கூட மக்களை நேசிக்க வைத்தார்.