ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் சமீபத்தில் 2023 ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியா பலமுறை ஆஸ்கார் விருதை இழந்துள்ளது.

ஆஸ்கார் விழாவில் பல தகுதியான இந்திய படங்கள் மற்றும் திறமைகள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறேன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது அறிவிக்கப்பட்டதும், ஒரு பார்வையாளனாக உணர்ச்சிவசப்பட்டேன். இந்தியன் என்பதைத் தவிர, எனக்கு தனிப்பட்ட முறையில் வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அந்த தருணம் மிகவும் பெருமையாக இருந்தது.