அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த வெற்றிகரமான தமிழ் படம் ‘தெறி’. ‘பேபி ஜான்’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். படம் தோல்வியடைந்ததால், கீர்த்தி சுரேஷ் புதிய படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவரது தமிழ் படங்களான ‘கண்ணிவெடி’ மற்றும் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகியவற்றின் நிலை இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்கிறார். ‘செக்டார் 36’ என்ற இந்தி படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இதை இயக்குகிறார்.
இது இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை நையாண்டி செய்யும் படமாக உருவாகி வருகிறது. அறிவை ஊட்ட வேண்டிய கல்வி எவ்வாறு வணிகமயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்தப் படம் பேசும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ராஜ்குமார் ராவின் மனைவி பத்ரலேகா இதை கம்பா பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார்.