சென்னை: நடிகர் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
ரவி மோகன் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர், பேசும்போது, தனது நண்பர் கெனிஷாவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் கூறியதாவது:- “இந்த விழா நடைபெறுவதற்கு முழு காரணம் கெனிஷா தான்.

அவள் இதை முழுவதுமாக எனக்காகச் செய்தாள். எனக்காக யாரும் அதைச் செய்ததில்லை. இவ்வளவு பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர் ரவிமோகன் ஸ்டுடியோஸின் கூட்டாளியும் கூட. ஒருவர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சிக்கித் தவிக்கும் போது, கடவுள் அவருக்கு ஏதாவது ஒன்றை அனுப்புகிறார்.
அது பணமாக இருக்கலாம், அது ஒரு சொத்தாக இருக்கலாம், அது ஒரு வாகனமாக இருக்கலாம். கெனிஷா கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு. நான் யார் என்பதை எனக்கு உணர்த்தியவர் அவள். எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று ரவி மோகன் கூறினார்.