தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்கிறார். தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றி பெறும் அவரது ரீத்தியும், புத்திசாலித்தனமான முடிவுகளும் அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன.அமரன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகி, ₹360 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து வெளிவர உள்ள மதராஸி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.

செப்டம்பரில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் பராசக்தி எனும் மற்றொரு படம், அரசியல் அடிப்படையிலான விஷயங்களை பேசுவதால், பொங்கல் 2026ல் வெளியாகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் போட்டியாக திரைக்கு வரும்.இந்நிலையில், குட்நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் காமெடியில் நையாண்டி கலந்த நகைச்சுவை கதையாக இருக்குமென கூறப்படுகிறது.படத்தில் முக்கியமானது, அப்பா கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை நடிக்க வைக்க திட்டமிடப்படுகிறது. மோகன்லால் ஒப்புக்கொண்டால், படத்தின் தரமும் மார்க்கெடும் மேலும் உயரும்.
இது மூலம் கேரளாவில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை பெருக்கவேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருப்பதாக தகவல். இது விஜய்யின் ஜில்லா படத்தை நினைவுபடுத்துகிறது. அந்த படத்திலும் மோகன்லால், விஜய்யின் அப்பாவாக நடித்திருந்தார்.இதை அடிப்படையாக வைத்து, சிலர் சிவகார்த்திகேயன் விஜய்யின் ஃபார்முலாவையே பின்பற்றி இருக்கிறார் என்கிறார்கள்.
ஒரே மாதத்தில் பட ரிலீஸ், அதே நடிகரை அப்பா வாக நடிக்க வைப்பது என ஒத்துப்போகும் அம்சங்கள் பல உள்ளன.விஜயின் பாதையில் சென்று, அதையே கடைப்பிடிக்கிறாரா என்பது ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது. ஆனால் இது ஒரு சூட்சுமமான தொழில்முறை முடிவாக இருக்கக்கூடும் என்பதும் உண்மைதான்.
மோகன்லால் ஒப்புக்கொண்டால், இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழி ரசிகர்களிடையிலும் பெரும் வரவேற்பை பெறும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள் எப்படி அமைகின்றன என்பதையும், அவரது வளர்ச்சி எந்த பக்கமாக செல்கிறது என்பதையும் காண எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.