ஹைதராபாத்: அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகினர். நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 8 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இதைக் கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்தார்.
18 கோடி ரூபாய்க்குக் குறைவாக சம்பளம் கேட்டால் நடிக்க முடியாது என்று நயன்தாரா தரப்பு உறுதியாகக் கூறியுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிரஞ்சீவி இந்த விஷயத்தில் தலையிட்டு நயன்தாராவிடம் பேசியுள்ளார். இதையடுத்து, நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு சம்பளமாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.