பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப், பான் மசாலா விளம்பரத்தில் குங்குமப்பூ இருப்பதாகக் கூறியதற்காக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் படியல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பான் மசாலாவில் குங்குமப்பூ இருப்பதாக கூறி மக்களை தவறான தகவலால் குழப்பி விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அவர் பான் மசாலாவிற்கு 5 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த குங்குமப்பூவை, தற்போதைய விலைக்கு 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதை நினைவில் கொண்டு, இந்த பான் மசாலாவில் குங்குமப்பூவின் நறுமணத்தைக் கூட சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோர் ‘விமல் பான் மசாலா’ விளம்பரத்தில் குங்குமப்பூ இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றி, பான் மசாலா உற்பத்தியாளர் விமல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் எனவும் மனுதாரர் கூறியுள்ளார்.
தவறான தகவலை பரப்பி மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் எதிர்பார்க்கின்றார். இதில், நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் மீனா, ஹேமலதா ஆகியோர் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு அமர்வில், 19 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு குறித்த நடிகர்கள் மற்றும் பான் மசாலா தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.