சென்னை: சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்ததாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வெளியான வீடியோவில் பிரகாஷ் ராஜ் பேசியதாவது:-
பெட்டின் ஆப் விளம்பரத்தில் நடித்தேன், இதற்கு பதில் சொல்கிறேன், அனைவரையும் விசாரிக்கிறேன். இதுவரை போலீசில் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை, வந்தால் கண்டிப்பாக பதில் சொல்வேன். 2016-ல் அப்படியொரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அதை விளம்பரம் செய்தேன். சில மாதங்களுக்குப் பிறகு, என் தவறை உணர்ந்தேன். ஆனால் ஒப்பந்தம் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டு, ஒப்பந்தத்தை நீட்டிக்க மீண்டும் என்னை அணுகினர்.

அது தவறு என்று அவர்களிடம் சொன்னேன். 2017-ல், எனது விளம்பரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் 2021-ல், மற்றொரு நிறுவனம் நிறுவனத்தை வாங்கியது. நான் நடித்த விளம்பரத்தை மீண்டும் விளம்பரப்படுத்தினார்கள். உடனே எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினேன். அது தவறு என்று நான் சொன்னதும் தடுத்து நிறுத்தினர். இது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அறியாமல் செய்த தவறு, அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்கிறேன்.
தயவு செய்து இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி இளைஞர்கள் பணத்தை இழக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.