‘சலார்’ படத்தைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சி எப்போது என்ற கேள்வி படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்படுகிறது. தற்போது, ’எம்புரான்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், பிருத்விராஜிடம் ‘சலார் 2’ எப்போது வெளியாகும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பிருத்விராஜ், “பிரஷாந்த் நீல் தற்போது ஜூனியர் என்டிஆர் படத்தில் பிஸியாக இருக்கிறார். நானும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறேன். பிரபாஸ் ‘சலார் 2’ படத்தையும் தொடங்குவார். மூவரும் தங்கள் படங்களை முடித்தவுடன் ‘சலார் 2’ தொடங்கும்” என்றார்.
இந்த பதில் ‘சலார் 2’ தொடங்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதை காட்டுகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பளே பிலிம்ஸ் தயாரித்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.