நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்குள் காதல் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய சந்தேகம் நீண்ட காலமாக ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இருவரும் இதுவரை உறவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றாலும், சமீபத்திய நிகழ்வுகள் இந்த சந்தேகங்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி, ஒரே காரில் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துகள், ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஒரே பின்னணியில் உள்ள சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ராஷ்மிகா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களில் இடம், சேலை மற்றும் புகைப்படக்காரருக்காக நன்றி தெரிவித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள், புகைப்படங்களை விஜய் எடுத்ததாகவும், சேலையை அவரது தாயார் கொடுத்ததாகவும் யூகித்து வருகிறார்கள்.
‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களில் இருவரும் இணைந்து நடித்ததிலிருந்து, இந்த ஜோடி ரசிகர்களிடையே தனி ரசிகர் பட்டாளம் பெற்றுள்ளனர். இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இதுவரை உறவை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வழங்கப்படாததால், காதல் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் தான் ரசிகர்களுக்கு பதிலாகி விடுகிறது. ஆனால் அவர்கள் இடையே உள்ள நெருக்கம் மறுக்க முடியாத ஒன்று.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவரும் தகவல்களும், இடையிடையே பரிமாறும் பரவசகரமான பார்வைகளும், அவர்களது உறவை உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளன. காதல் பற்றி நேரடியாக கூறவில்லை என்றாலும், இயல்பாகவே வெளிப்படும் அந்த நெருக்கம் ரசிகர்களின் கண்களில் தெளிவாக தெரிகிறது. எப்போது இந்த இருவரும் உறவை உறுதிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.