நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த வருத்தங்களை பற்றிய உணர்ச்சி மிகுந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக கொடுமை அனுபவித்ததாக கூறிய அவர், தற்போது தான் பொது மக்களிடம் உண்மையை பகிர விரும்புகிறேன் என்கிறார்.அவரது மனைவி ஆர்த்தி தன்னை கணவனாக பார்க்காமல், வெறும் பணவசதிக்காக பயன்படுத்தியதாகவும், மகன்களை பார்க்க கூட அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மகன்கள் கார் விபத்தில் சிக்கிய விஷயத்தை கூட நேரடியாக சொல்லாமல், கையெழுத்துக்காக வந்தவர்களிடம்தான் தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.சமூக வலைதளங்களில் ரவி மோகன் மற்றும் அவரது தெரபிஸ்ட் கெனிஷா பிரான்சிஸுடன் எடுத்த புகைப்படம் வைரலானது.
இதற்குப் பின்னர் கெனிஷா, அவர் ரவியின் தெரபிஸ்ட் மற்றும் தோழி மட்டுமே என விளக்கம் அளித்தார்.ரவி தனது அறிக்கையில், “கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில் என் மீது வந்த விமர்சனங்கள், நான் அனுபவித்த 16 ஆண்டுகளின் கொடுமையுடன் ஒப்பிட முடியாது,” என கூறியுள்ளார். மேலும், “பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையால் கொடுமை அனுபவிக்கிறார்கள்.
இதை நான் நேரில் அனுபவித்தேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.சட்டத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், இனி அந்த வாழ்க்கைக்கு திரும்பப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார். இது தொடர்பாக இது தான் தனது கடைசி அறிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரவி மோகனின் இந்த உருக்கமான வெளிப்பாட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். “ரவி, நீங்க தைரியமாக இருங்க, உண்மை வெல்லும்” என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.தாங்கள் எதிர்கொண்ட வேதனைகளை தைரியமாக வெளிப்படுத்திய ரவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிலளித்து வருகிறார்கள்.