புதுடில்லி: குடியரசு தினத்தன்று ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கொடுத்த விருந்திற்கு சமந்தா அழைக்கப்பட்டார். அந்த விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது மீண்டும் பிசியாக படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் அவர். மேலும் சொந்த நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கவும் செய்கிறார் அவர். குடியரசு தினத்தன்று ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கொடுத்த விருந்திற்கும் சமந்தா அழைக்கப்பட்டு இருக்கிறார்.
அந்த விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு இருக்கிறார்.