சென்னை: சமந்தா இயக்குனருடன் நெருக்கமாக ‘போஸ்’ கொடுத்து தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். சமந்தா நாக சைதன்யாவுடன் பிரிந்த பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற இந்தி வலைத் தொடரில் நடித்தார். அப்போது, சமந்தா அந்த வலைத் தொடரின் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் நட்பு கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ராஜ் இயக்கிய ‘சிட்டாடல்’ என்ற வலைத் தொடரிலும் சமந்தா நடித்தார். இதில், அவர்கள் நெருக்கமாகிவிட்டனர். இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று விமானத்தில் ஹைதராபாத் வந்த சமந்தாவின் அடுத்த இருக்கையில் ராஜ் அமர்ந்திருந்தார்.

அப்போது, சமந்தா ராஜின் மீது சாய்ந்து நெருக்கமான புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுத்தார். இதன் மூலம் அவர்களின் காதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணமானவர். அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக பாலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.