‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அவரே தயாரிக்கவும் செய்தார். ஜூலை 4, 2008-ல் வெளியான இத்திரைப்படத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதன்பிறகு 2010-ம் ஆண்டு ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார், அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதால் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.
ஆனால், சமூக வலைதளங்களில் பலரும் அவரிடம் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகுமார், விரைவில் ஒரு பீரியட் கதையை இயக்கவுள்ளதாகவும், அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு 2026 ஜனவரியில் தொடங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘டூரிஸ்டு பேமிலி’. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படத்தை அரவிந்த் விஸ்வநாதன் கையாண்டுள்ளார், ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. படம் மே 1-ம் தேதி வெளியாகிறது.