இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். ஏபிசிடி 4, ராக் ஆன் 2, பாகி உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்ட்ரீ 2’ படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ஷ்ரத்தா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். இந்நிலையில், ஏக்தா கபூர் தயாரிக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்க ரூ.17 கோடி சம்பளம் கேட்டதாகவும், லாபத்தில் பங்கு கேட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஏக்தா கபூர் மறுத்ததால் அவர் படத்திலிருந்து விலகியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், படத்தை இயக்கவிருக்கும் ராகு அனில் பார்வே, இது எல்லாம் வதந்தி என்று கூறியுள்ளார். இருப்பினும், ஷ்ரத்தா கபூர் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் கூறவில்லை.