சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து நடிகர்கள் உட்பட பல முக்கிய கலைஞர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.

இருப்பினும் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்னும் இலங்கையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் படப்பிடிப்பிற்கான செலவுகளை அங்கு படப்பிடிப்பை ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் இன்னும் கொடுக்கவில்லை.
எனவே, அவர்களின் பாஸ்போர்ட்டை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தொழில்நுட்ப கலைஞர்களை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வர படக்குழுவை சேர்ந்த சிலர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.