சுகுமார் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீவள்ளி கேரக்டரில் ராஷ்மிகா நடிக்கிறார். இதில் அவரது நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஷ்மிகா, அந்த கதாபாத்திரம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், “ஸ்ரீவல்லிக்கு நீங்கள் அளித்த வரவேற்பு சிறப்பு. அவள் என் இரண்டாவது அடையாளமாகிவிட்டாள். என் திரையுலகப் பயணத்தில் இப்போது இருக்கும் இடத்தை எனக்குக் கொடுத்தவர் ஸ்ரீவள்ளி. இதற்காக இயக்குநர் சுகுமாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதை சாத்தியமாக்கிய மேதை அவர். புஷ்பா இல்லாமல் ஸ்ரீவள்ளி இல்லை. அதற்கு அல்லு அர்ஜுனுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல; நான் அவரை உண்மையாக உணர்கிறேன்.”