சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒன்றரை மாதம் ஆகும் நிலையிலும் இன்னும் என்னை பலர் நாமினேட் செய்து வருகின்றனர் என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 8ம் சீசன் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது. அதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்த நிலையில் சௌந்தர்யாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே சௌந்தர்யா மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனம் அவர் PR வைத்து அதிகம் ஓட்டுகள் என்பது தான். அதை அவரும் ஒப்புக்கொண்டார். அவரை பற்றி மேலும் சில விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஷோ முடிந்தும் ஒன்றரை மாதம் ஆகியும் தன்னை சிலர் நாமினேட் செய்து வருகிறார்கள் என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். “பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் “இன்னும்” சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள்” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.