சென்னை: சுந்தர்.சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக நடைபெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும், இயக்குநர் சுந்தர்.சிக்கும் இடையே சில பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கும் நயன்தாராவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. ஏன் இந்த கதை பரவியது என்று தெரியவில்லை. நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகை, ஷூட்டிங்கில் அரை மணி நேரம் இடைவெளி இருந்தால், கேரவனுக்கு போகச் சொல்வேன். ஆனால் லொகேஷனில் இருப்பது அவரது வழக்கம். இப்படி வரும் கிசுகிசுக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்றார்.