
புதுடெல்லி: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்தாகவும், சாய் பல்லவி அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வந்து 5 வாரங்கள் ஆகிறது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் காரணமாக இப்படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ‘அமரன்’ குழுவினர் சந்தித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். ‘அமரன்’ படத்தின் வெற்றிக்காக மத்திய அமைச்சர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.