தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா தெலுங்கிலும் நடிக்கிறார். ஆடம்பரமான செலவுகளால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். கடந்த ஆண்டு, தனது பிறந்தநாளில் தங்க கேக் வெட்டினார்.
இந்த ஆண்டு, அவர் தனது பிறந்தநாளில் வைர ஆடை அணிந்திருந்தார். இந்நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளார். இதன் விலை 10 கோடியே 50 லட்சம் ரூபாய். இந்த காரை வைத்திருக்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் ஊர்வசி பெற்றுள்ளார்.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே கூட இந்த கார் சொந்தமாக இல்லை. அதே சமயம், குறைவான படங்களில் நடித்த ஊர்வசிக்கு இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வாழ எங்கிருந்து பணம் கிடைக்கிறது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.