விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் நாளை ரிலீசாகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் என்றும், அதன் பின்னர் முதல் பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஷிபு தமீம்ஸ் தயாரித்துள்ளார். அவர் முன்னதாக விக்ரம் நடிக்கும் ‘இருமுகன்’ மற்றும் ‘சாமி 2’ ஆகிய படங்களை தயாரித்து, அவற்றில் பெரிய நஷ்டங்களை சந்தித்தார். தற்போது, ‘வீர தீர சூரன்’ படத்தின் தயாரிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், படக்குழுவினருக்கு மகிழ்ச்சி இல்லை என்று கூறப்படுகிறது.
படத்தில் பணியாற்றிய விக்ரம், இயக்குனர் அருண் குமார் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக தொடர் தோல்வியுடன் வெளிவந்த படங்களால், தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.