திருமண வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா கிண்டலாக பதிலளித்துள்ளார். சமீப நாட்களில், நடிகை த்ரிஷா சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வதாகவும், இரு குடும்பங்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த தகவலுக்கு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். தனது பதிவில், “மற்றவர்கள் எனக்காக என் வாழ்க்கையைத் திட்டமிடுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

அவர்கள் தேனிலவுக்கும் ஏற்பாடு செய்வதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு வைரலாகி வருகிறது.
த்ரிஷா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘சிரஞ்சீவி’ உடன் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.