ரவி அரசு இயக்கும் ‘மகுடம்’ படத்தில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷாலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
விஷால் இப்போது தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார். சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க விஷால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மதகஜராஜா’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி மீண்டும் இணையும் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் சுந்தர்.சி கவனம் செலுத்தி வருகிறார்.
அதை முடித்த பிறகு, படத்தின் முதல் கட்ட வேலைகளை விஷால் கவனிப்பார். பட பூஜை உள்ளிட்ட பணிகள் நவம்பரில் தொடங்கும். இந்தப் படத்திற்கான நடிகர்கள் தேர்வும் விரைவில் தொடங்கும்.