பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யும் சாட்சியின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘சாட்சி பெருமாள்’. இதில் அசோக் ரங்கராஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே. வீரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மஸ்தான் இசையமைத்துள்ளார். வி.பி. வினு இயக்கியுள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் 10 விருதுகளை வென்ற இப்படம் தற்போது ‘டென்ட் கோட்டா’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான சிங்கம்புலி உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.