தேவையானவை:
துளசி, வெற்றிலை, கற்பூர இலைகள், தூதுவளை
புதினா – தலா ஒரு கைப்பிடி
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 1/2 டீஸ்பூன்
தானியா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – 2 கிளாஸ்.

செய்முறை: மேற்கண்ட மூலிகைகளை நன்றாகக் கழுவி, பேஸ்டாக அரைத்து, மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து, 2 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, எலுமிச்சை சேர்த்து சூடாக குடிக்கவும். இது உடல் வலி, தொண்டை கரகரப்பு மற்றும் சளி போன்றவற்றை நீக்குகிறது. குளிர்காலத்தில் நீங்கள் இதை அடிக்கடி குடிக்கலாம்.