சென்னை: அசத்தல் சுவையில் பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
500 மிலி வெஜிடபிள் ஆயில்
200 கி பன்னீர், எட்டு துண்டுகளாக வெட்டியது
25 கி சோளமாவு 10 மிலி
தேங்காய் எண்ணெய் 10 கி
இஞ்சி, நறுக்கியது
25 கிராம் பூண்டு, நறுக்கியது
50 கிராம் வெங்காயம், நறுக்கியது
15, 20 கறி வேப்பிலை
2 பச்சை மிளகாய், நறுக்கியது
20 கிராம் நொறுக்கிய மிளகு
சுவைக்கேற்ப உப்பு
ஒரு கட்டு கொத்தமல்லி, நறுக்கியது
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
செய்முறை: எண்ணெயை ஒரு ஆழமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் சூடாக்கிக் கொள்ளவும். பன்னீர் துண்டுகளை, சோளமாவில் நனைத்து, நன்குப் பொரித்து கொள்ளவும். எண்ணெயில் இருந்து எடுத்து, கிச்சன் டவலில் வைத்து, எண்ணெயை வடிக்கவும். வேறொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம், கறி வேப்பிலைகள், பச்சை மிளகாய் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும். வறுத்த பன்னீர் துண்டுகள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.