தேவையான பொருட்கள்
இட்லி – 4
பன்னீர் – 100 கிராம்
எண்ணெய் – வறுக்கவும் தாளிக்கவும்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். பின்னர் நறுக்கிய பன்னீர் சேர்த்து, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியைச் சேர்த்து கிளறவும். கரம் மசாலா சேர்க்கவும். சுவையான இட்லி பன்னீர் ப்ரை தயார்.