நீண்ட நாட்களாக இருட்டு வழியாக நடைபெற்று வந்த ஈரான்-இஸ்ரேல் மோதல் தற்போது நேரடி தாக்குதல்களாக மாறியுள்ளது. இஸ்ரேலின் உலகப் புகழ்பெற்ற அறிவியல் நிறுவனம் வெய்ஸ்மேன் கல்லூரி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், ஆய்வக கட்டடங்கள், ஆய்வுகள் மற்றும் ஆய்வுத் தரவுகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

இஸ்ரேலின் அறிவியல் களஞ்சியமாக விளங்கும் ரெஹோவோத் நகரில் உள்ள இந்த நிறுவனம் கடந்த 90 ஆண்டுகளாக உலகத்தர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேதியியல், உயிரியல், கணினி விஞ்ஞானம் போன்ற துறைகளில் உலகப்புகழ் பெற்ற இந்த நிறுவனத்திலிருந்து ஒரு நோபல் பரிசும், மூன்று ட்யூரிங் விருதுகளும் பெற்றுள்ளனர்.
இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம், இஸ்ரேலின் அறிவியல் வளர்ச்சியை பின்னடைவுக்கு இட்டுசெல்லும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இஸ்ரேல், ஈரானின் அணு திட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், இது பதிலடி என கணிக்கப்படுகிறது. ஈரான் நேரடி பதிலடி கொடுப்பதாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
இந்த நிழல் போர் ரகசிய தாக்குதல்களாக இருந்த நிலையில், தற்போது நேரடியாக அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள் இலக்காக மாறிவருவது கவலையளிக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் விலை ஆகியவை இச்சம்பவத்தின் தாக்கத்தில் கீழ் இறங்கியுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பும் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போரில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக தாக்கப்படுவது என்பது வரலாற்றில் சிலவேறு நிகழ்வுகளில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இப்போது இது புதிய நிலையை நோக்கி நகர்கிறது.