June 25, 2024

கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய் காசோலையை டெபாசிட் செய்தவரின் செயலால் பரபரப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.

இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில் அதிகாரிகள் சார்பில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது வங்கி கணக்கில் இருந்து காசோலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த காசோலையில் கோவில் பெயரில் ரூ.100 கோடி நன்கொடையாக எழுதப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை இருப்பது தெரியவந்தது.

எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் காசோலை இருந்தது. மேலும், வராகலட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ.10 என்று எழுதப்பட்டு பின்னர் ரூ.100 கோடி என அடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் வங்கிக்கு சென்று சேமிப்பு கணக்கு விவரங்களை கேட்டறிந்தனர். சேமிப்பு கணக்கில் 17 ரூபாய் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காசோலையை டெபாசிட் செய்த நபரை கண்டுபிடித்து, இது போன்ற செயல் இனி நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க, கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய் காசோலையை டெபாசிட் செய்தவரின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!