தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை அதிரடி உயர்வு..!!
![](https://vivegamnews.com/wp-content/uploads/2024/04/25-1-12.png)
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு செங்குன்றம், தாம்பரம், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன.
இன்று தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் குவிந்தன. அதேசமயம் பூக்களின் தேவை அதிகரித்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மல்லிகை, முல்லை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை வாங்க, காலை முதலே ஏராளமான சிறு வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். மல்லி, ஐஸ் மல்லி ₹500, காட்டு மல்லி ₹400, முல்லை, ஜாதிமல்லி ₹450, கனகாம்பரம் ₹1000, சாமந்தி ₹300, சம்பங்கி ₹250, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஜா ₹140, சாக்லேட் ரோஜா ₹160 என விற்பனையானது.