June 25, 2024

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிவு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

ஒரு வாரத்துக்கு முன் சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.1,200-க்கும், ஐஸ் மல்லி ரூ.1000-க்கும், காட்டு மல்லி ரூ.450-க்கும், ஜாதி மல்லி ரூ.600-க்கும், முல்லை ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது.

இதேபோல் அரளி பூ 150-க்கும், சாமந்தி 180-க்கும், சம்பங்கி 120-க்கும், பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஜா 100-க்கும் விற்பனையானது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தநாள் இல்லாததால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்துள்ளது.

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.250-க்கும், ஐஸ் மல்லிகை ரூ.200-க்கும், காட்டு மல்லிகை ரூ.150-க்கும், முல்லை, ஜாதி மல்லிகை, கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி பூ 80-க்கும், சாமந்தி 100-க்கும், சம்பங்கி, பன்னீர் ரோஸ் 30-க்கும், சாக்லேட் ரோஸ் 40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், ”கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால், அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது.

இதனால், விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 9-ம் தேதி அமாவாசை என்பதால் அனைத்து பூக்களின் விலையும் மீண்டும் உயரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!