May 22, 2024

கோலியின் பிறந்தநாளில் சிறப்பு நிகழ்ச்சிகள்… கொல்கத்தா கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்தியா: கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் மிகவும் செல்வாக்கு செலுத்தியவர்களில் விராட் கோலியும் ஒருவர். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்தவர்.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கோலி, வரும் நவம்பர் 5ம் தேதி தனது 35வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

அன்றைய நாளை சிறப்பாக கொண்டாட விரும்பும் கொல்கத்தா கிரிக்கெட் வாரியம் போட்டியை பார்க்க வரும் 70000 ரசிகர்களுக்கும் கோலி முகம் பதித்த முகமூடிகளை வழங்க உள்ளதாகவும், சிறப்புமிக்க கேக் ஒன்றை வெட்ட உள்ளதாகவும், மேலும் கோலிக்காக லேசர் ஷோ ஒன்றை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஐசிசி யிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!