May 4, 2024

கபடி போட்டியில் வேம்பார் கடல்புறா அணி வெற்றி…

சிதம்பர நகர்,

வாத்தியார் கபடி அணி சார்பில் சிதம்பர நகரில் 36வது ஆண்டு கபடி போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 52 அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் போட்டியில் முதல் பரிசை வேம்பார் கடல்புறா கபடி அணியும், இரண்டாம் பரிசை தூத்துக்குடி முத்தையாபுரம் நேசம்மாள் அணியும், மூன்றாம் பரிசை காயல்பட்டினம் கபடி அணியும், நான்காம் பரிசை ஜெயம் ஆடியோ கபடி அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. தோல்வியடைந்த அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை சிதம்பர நகர் வட்டார தலைவர் செல்வராஜ், செயலாளர் அரசகுமார், 12வது வார்டு குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் வத்திராயிருப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!