பெங்களூரு அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோலி விளையாடக்கூடாது
பெங்களூரு: பெங்களூரு அணியில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக விளையாடக் கூடாது என முன்னாள் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 4வது வீரராக விராட் கோலி விளையாடி வருகிறார். மாறாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடுவது வழக்கம். அதற்கு நல்ல பலன்களும் கிடைத்து வருகிறது. பெங்களூரு அணி மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமானார்.
இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது – பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி விளையாடி ரன் சேர்த்துள்ளார். ஆனால் இந்த சீசன் முழுவதும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி ரன்களை குவிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அவரைப் போலவே அணியில் உள்ள மற்ற வீரர்களும் தயாராக வேண்டும். அப்போதுதான் அணி வலுவாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். இந்த அடிப்படையில் விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரராக ஆடுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அதேபோல் பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘என்னை பொறுத்த வரை பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாகவே தெரிகிறது. மற்ற அணிகள் இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும். விராட் கோலியும், டு பிளெசிஸும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினால் அது எதிரணிக்கு பலமாக இருக்கும்’ என்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.