பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி ஊர்வலம் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆர்சிபி அணியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றி விழாவுக்கு போலீசும், மாநில அரசும், பிசிசிஐயும் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், ஆர்சிபி நிர்வாகம் தங்களது சுய விருப்பத்தின் பேரில் நிகழ்ச்சியை நடத்தி, பரிதாபமான முடிவை சந்திக்க நேர்ந்தது. இதன் அடிப்படையில் ஆர்சிபி உரிமையாளர்கள் மற்றும் கூட்டம் ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனம் மீது பெங்களூர் காவல்துறையால் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) இரு முக்கிய நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். இதேவேளை, ஒரு முக்கிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதும், இன்னும் சிலரை போலீசார் விசாரணைக்காக அழைக்கவுள்ளனர்.
FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் கொலைக்குக் காரணமான மரணம், கூட்டு நடவடிக்கையால் காயம் ஏற்படுத்தல், சட்டவிரோத கூட்டம், பொது ஊழியர்களை தடுக்கல் உள்ளிட்டவை உள்ளடக்கியவை. இந்த சட்டபிரிவுகளின் கீழ் நடப்பது என்பது சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.
விழாவில் காயமடைந்த ரோலண்ட் கோம்ஸ் என்பவரின் புகாரின் அடிப்படையில், மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் RCB உரிமையாளர்கள் மற்றும் DNA நிறுவனம் மீதும் விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் பிசிசிஐ ஆர்சிபி அணியின் மீதான தண்டனை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த சம்பவத்தின் பொறுப்பை நிர்வாகம் ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஐபிஎல் பிரமாணத்தையும் நம்பிக்கையையும் காக்கும் விதமாக, முக்கிய முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
ஆர்சிபி அணிக்கு எதிரான இந்தச் சூழ்நிலை, ஐபிஎல் வரலாற்றில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என பார்வையாளர்கள் கணிக்கின்றனர். உணர்ச்சியால் முடிவெடுக்கப்பட்ட நிகழ்ச்சி, இன்று ஒரு தரமான அணிக்கே பெரும் ஆபத்தாக மாறி இருக்கிறது.