அகமதாபாத்தில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மும்பையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் அணி, ஃபைனலில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய மும்பை அணி 204 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. அவர்களுக்காக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 44 ரன்களும், பேர்ஸ்டோ 38 மற்றும் நமன் திர் 37 ரன்களும் எடுத்தனர்.

ஆனால் அந்த இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 19 ஓவரிலேயே 207 ரன்கள் எடுத்தது. அட்டகாசமான பேட்டிங்குடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோஸ் இங்லிஷ் 38 மற்றும் நேஹல் வதேரா 48 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவூட்டினர். இந்த வெற்றியில் பஞ்சாப் அணியின் மிடில் ஆடர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பந்து வீச்சில் அஸ்வனி குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும், மும்பை அணிக்கு எதிர்மறையான முடிவே அமைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
போட்டிக்குப் பின் பேசிய பஞ்சாப் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், “குவாலிபயர் 1 போட்டியில் தோல்வி பெற்ற பிறகு நாங்கள் அதில் மனமுடைந்துவிடவில்லை. எங்களுடைய திறமை மற்றும் ஒற்றுமையில் நம்பிக்கை வைத்தோம். இன்று நாங்கள் வென்றது அந்த நம்பிக்கையின் பலனாகும். இது இன்னும் முடிவல்ல. ஃபைனல் வரை வெற்றியைக் தொடரவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்” எனக் கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்தது, “200 ரன்கள் துரத்தும் பேட்டிங் ஆக இருந்தாலும், எங்கள் அணியினர் எந்த நேரத்திலும் அழுத்தத்தில் சிக்கவில்லை. எனது மனதிற்குள் அமைதி இருந்தது. இது போன்ற தருணங்களில் அமைதியாக இருப்பது வெற்றிக்கு முக்கியமாக இருக்கிறது. நாங்கள் எங்கிருந்து தொடங்கினோம் என்பதையும், இப்போது எங்கு இருக்கிறோம் என்பதையும் எண்ணிக்கொள்கிறோம். ஒரு தோல்வி எங்களை தகர்க்க முடியாது. எங்களது பயணம் இன்னும் முடியவில்லை. ஃபைனலில் வெல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்” என்று உருக்கமாக தெரிவித்தார்.