
ஷார்ஜா: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சார்ஜாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை யு-19 அணி 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக லக்வின் அபேசிங்க 69 ஓட்டங்களையும், ஷாருஜன் சண்முகநாதன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய யு-19 அணியில் சேத்தன் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரண், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய யு-19 அணி 21.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார். ஆயுஷ் மகத்ரே 34, முகமது அமன் 25, ஆந்த்ரே சித்தார்த் 22 ரன்கள் எடுத்தனர். நாளை துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் வங்கதேசம் // விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.