சிங்கப்பூரில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து கனடாவின் வென் யு ஜாங்கை எதிர்கொண்டார். 31 நிமிட ஆட்டத்தில், சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற 5-வது நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூ ஃபீயை சிந்து எதிர்கொள்வார். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங்கிடமும், பிரியன்ஷு ரஜாவத் ஜப்பானின் கோடா நரோகாவிடம் 21-14, 10-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
அன்மோல் ஹார்ப் 11-21, 22-24 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யுபியிடமும், கிரண் ஜார்ஜ் 19-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங்யாங்கிடமும், சந்தோஷ் ராம்ராஜ் தென் கொரியாவின் கிம் காவிடம் 14-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிறிஸ்டோ ஜோடி 18-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் செங் ஜிங்-ஜாங் ஜிஹாய் ஜோடியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு இந்திய ஜோடியான அஷித் சூர்யா மற்றும் அம்ருதா பர்முதேஷ் ஜோடி 11-21, 17-21 என்ற கணக்கில் ஜப்பானின் யுசி ஷிமோகாமி சயாகா ஹோபராவிடம் தோல்வியடைந்தது.