நேற்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு அணி தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.

இதன் பின்னர், கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு அதிகாரபூர்வமாக நிறைவடைந்து, அவர்கள் தொடரில் இருந்து வெளியேறின. அந்த நேரத்தில், ஒரு உணர்ச்சிபூர்வமான செயல் நடந்தது, இது அனைவரையும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் நிகழ்வுடன் தொடர்புடையது.
அந்த நிகழ்வின் போது, விராட் கோலியின் ரசிகர்கள், வழக்கமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிகப்பு நிற ஜெர்சியினை தவிர்த்து, வெள்ளை நிற ஜெர்சியில், 18வது நம்பருடன் மைதானத்திற்கு வந்தனர். இந்த செயல், விராட் கோலியின் கரியரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது, மேலும் மழையினால் போட்டி தடைபட்டபோதும், அந்த மரியாதை அனைவரது மனதில் இடம் பெற்றது.
இதை கவனித்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் இந்த செயலைப்பற்றி ஒரு உணர்ச்சியுடன் பதிவிட்டார். “விராட் கோலியின் டெஸ்ட் கரியரை கௌரவிக்கும் வகையில், வெள்ளை ஜெர்சியில் மைதானத்தை நிரப்பிய ரசிகர்களை பார்த்து மனம் நெகிழ்கிறது. இது மிக எளிதாக தெரிந்தாலும், இது ஒரு பவர்ஃபுல்லான வீரருக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.