கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 34 வயதான அவர் காயம் காரணமாக தனது ஃபார்மில் சிரமப்பட்டு வருகிறார், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தவறவிட்டார். அவர் ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக, அவர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பார் என்று தகவல் பரவி வருகிறது.
இது குறித்து முகமது ஷமி, “யாருக்காவது ஏதேனும் பிரச்சனை இருந்தால், சொல்லுங்கள், நான் ஓய்வு பெற்றால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறுமா? என் காரணமாக யாருடைய வாழ்க்கை மாறப் போகிறது என்று சொல்லுங்கள், நான் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? எனக்கு சலிப்பாக இருக்கும்போது, நான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பேன்.

சர்வதேச போட்டிகளில் நான் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவேன். நான் எங்காவது விளையாடுவேன். எனக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே உள்ளது, அது ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வது. “நான் அந்த அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், ஒருநாள் உலகக் கோப்பையை வென்று அதை வீட்டிற்குக் கொண்டுவர சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்.
2023-ல் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தோம், ஆனால் தோற்றோம். இப்போது என் கவனம் நீண்ட பந்துவீச்சுப் பயிற்சியில் உள்ளது. நான் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சி செய்து வருகிறேன். ஜிம்மில் நிறைய பயிற்சி செய்து வருகிறேன்,” என்று அவர் கூறினார்.