
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில், நடப்புச் சாம்பியனான சீனாவின் டிங் லிரன், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷை எதிர்கொள்கிறார். 14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் டிங் லிரன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து, மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, அடுத்த 6 சுற்றுகளும் சமநிலையில் முடிவடைந்தன. இந்நிலையில் ஒரு நாள் இடைவேளைக்கு பின் நேற்று 10-வது சுற்று ஆட்டம் நடந்தது. டிங் லிரன் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினர். 36-வது நகர்வில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன. 10 சுற்றுகள் முடிவில் டிங் லிரன் மற்றும் குகேஷ் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்று மதியம் 2.30 மணிக்கு 11-வது சுற்று நடக்கிறது.